மெளனம் ஒன்றே எஞ்சுகிறது.

மெளனம் இறைவன் அருளிய
உன்னத மொழி
நாம் பிறந்த போதும்
மண்ணில்
இறந்த போதும்
மெளனம் ஒன்றே எஞ்சுகிறது.

மனதின் மூடி
மெளனம்.
சோகங்களை மூடி
வைக்கவும்.
வார்த்தைகளை பூட்டி
வைக்கவும்
மெளனத்தினால்
மட்டுமே முடியும்.

உதடு திறந்து
பேச முடியாத போது
கண்களை பேசவைக்கும்
கைங்கரியம்
மெளனத்திற்கு மட்டுமே.

உதடுகள் வெட்டி விட்ட
உறவுகளையெல்லாம் .
மெளனம் ஒட்ட வைத்து
உயிர் வாழச் செய்கிறது.

குடும்பம் கட்டுப்பாடு
குலையாமல் இருப்பதும்
இல்லறம் இனிப்பாய்
அமைவதும்
மெளனத்தின் சாதனைகளே.

கவிஞர். ஏரூர் கே. நெளஷாத்