மே_தின_வாழ்த்துக்கள்

உலகெலாம் பரந்து வாழும்
தொழிலாளர்களுக்கும்
அவர்கள் பட்ட வலிகளுக்கும்
நலன் பெற்ற நன்னாள்
உழைப்பாளர்களின்
உன்னத நாள்
இயந்திரங்க இன்றி
மனிதனை இயந்திரமாக்கி
நேர காலம் இன்றி
இரத்தங்கள் வியர்வைகளாகி
உழைக்கும் மனித சக்தியே
மாபெரும் வழங்கள் நீங்கள்
உங்களை மனதார வாழ்த்துகிறேன்..
தொழிலாளர் தம்
உரிமைக்காக
ஓங்கிக் குரல் கொடுத்தே
வரையறை செய்யப்பட்ட
மணித்தியாலயங்களுக்குள்
மனிதன் இயந்திரமானான்../
முதலாளிகள் எல்லாம்
பணத்தோடு புரழ
தொழிலாளிகள் தம்
உடலோடு போராடினர்…//
முதலாளி வர்க்கத்தின்
கொத்தடிமைத்தனத்தின்
வரையறையற்ற நேர உழைப்பில்
கொதித்தெழுந்த
தொழிலாளர் தொடர் போராட்டங்களின் சமிக்சையாக
கிடைத்த வெற்றித் திருநாளே
மே தினம் ஆகும்
ஆஸ்ரேலியாவில் விடியல் கண்ட
அந்த நன் நாள் உலகம் முழுக்க
வியாவித்து தொழிலாளர்களிடையே
வருடா வருடம் கொண்டாடப்படுகிறதே
மே முதலாம் திகதி
இன்று வரை
சுரண்டப்பட்டு
சூரையாடப்படுகிறது
தொழிலாளர் உழைப்பினை
இந்த முதலாளித்துவமே
அடிமைத்தனத்தை உடைத்து
தங்களுக்கென்று ஒரு தனித்துவத்தை
ஏற்படுத்தி விடுமுறை நாளாக
கொண்டாடிவருகிறது உலகமே
உழைப்பு இவர்களின் உயிராகி
பணம் இவர்களுக்கு தூரமாகி
நலம் பேணி வளமாக இருக்க
நாளும் பொழுதும்
உழைப்பை நம்பி வாழும் இந்த
தொழிலாளர்களை
நாமும் வாழ்த்துவோம்
அனைவருக்கும் இனிய
தொழிலாளர் தின நல் வாழ்த்துகள்
ஜெசுதா யோ