மைனாவின் மனதிலே *கவிதை ஜெசுதா யோ

 

மைனாவின் மனதிலே
மாமன் உன் நினைப்பிலே
தினுசாகத் தான் இருக்கான்
தென்மாங்கு பாடி வருவான்

சோலை வனம் எங்கும்
சோடிக்கிளி ஒன்னு
தனியாக பாடுதடி
தன் மாமனைத் தேடுதடி

வயலோரம் என் மைனா
வரம்போடு நடந்து
கண்குளிர என்னைக்காண
கால்கடுக்க நடந்துவாறாளே

என்நினைப்பு மட்டுமே
என் மைனாவின் மனதிலே
கொடியாக படருதே
குதூகலமாய் வாழுதே

கொஞ்சி நீயும் பேசுகையில்
கொஞ்சம் தளர்ந்து போறேனடி
வஞ்சி உன் பின்னழகில்
வாய்பிழந்து நின்றேனடி

நீ எங்க கிராமத்து அழகியடி
நீ நடந்தால் ஊரே பார்க்குமடி
உன் மனதில் ஏனோ
நான் மட்டும் இருக்கேனடி

மைனா உன் மனதிலே
மாமன் புகுந்ததிலே
எனக்கு தான் பெருமையடி
என் உயிரே நீ தானடி

ஆக்கம் ஜெசுதா யோ