மொழி பேசும் விழிகள்

 

அசைந்தாடும் கேசமுடையாளோ..
அடங்காத பாசமுடையாளோ..
இசை மீட்டி இதயம்
தொடுவாளோ..
இளங் காற்றைப் போல வருவாளோ..
அலங்கார தேகமுடையாளோ
அரிதாரம் பூசத் தருவாளோ..
அடையாளம் காணும் இடைவாளோ..
அலைபோல உறவாட வருவாளோ..
மொழி பேசும் விழிகள் தீ வாளோ..
முழம் போட்டு என்னுயிரைக் கொல்வாளோ..
முகம் காட்டும் நிலவே நீயாரோ..
கவித்தென்றல்