யாரைத்தான்…….!

மாறிப்போகும்
மனிதம்;
மரத்துப் போன
மனிதம்;
மகுடம் சூடும்
வஞ்சகம்..!
நிலை கெட்ட
மனிதன்
தறி கெட்ட
மனநிலை
உருப்படாத
உலகம்….!
இடம் பொருள்
ஏவல்;;
எதுவும் உணராத
பெரும் போக்கு
நம்பிக்கை நாண்
அறுந்திட
துரோகம் ஒன்றே
தளைக்கின்றது;
ஊதாசீனமாகும்
உதவிகள்
உயிரைக் கொடுத்து
உயிரை
மீட்பவனுக்கும்
உத்தரவாதம்
இல்லாத இழி நிலை..
பிழைக்குமா

ரி.தயாநிதி