யாழ் தமிழ்ச்சங்கம் நடத்திய பாரதி நினைவரங்கம்

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த பாரதி நினைவரங்கம் கடந்த 30.12.2017 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நல்லை ஆதீன கலாமண்டபத்தில் நடைபெற்றது.

தமிழ்ச்சங்கப் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வரவேற்புரையை வேல்.நந்தகுமாரும் தொடக்கவுரையை தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாசும் ஆற்றினர்.

தென்கிழ்க்கு பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி க.இரகுபரன் பாரதியும் இயற்கையும் என்ற பொருளில் உரையாற்றினார்.

தொடர்ந்து கவிஞர் சோ.பத்மநாதன் தலைமையில் இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற பொருளில் கவியரங்கம் இடம்பெற்றது. இக்கவியரங்கில் கவிஞர்களான த.ஜெயசீலன், கு.றஜீபன், இ.சு.முரளிதரன், தர்மினி றஜீபன் ஆகியோர் பங்கேற்றனர்.தமிழ்ச்சங்க ஆட்சிக் குழு உறுப்பினர் சி.சிவஸ்கந்தஸ்ரீ நன்றியுரை ஆற்றினார்.