யாழ் நெல்லியடியில் வரையப்பட்ட சுவர் ஓவியம் அனைவரினது பாராட்டை பெற்றது

யாழ் நெல்லியடியில் வரையப்பட்ட சுவர் ஓவியம் அனைவரினது பாராட்டை பெற்றது…………….யாழ்ப்பாணத்தில் நெல்லியடியில் வரையப்பட்ட தட்டிவான் சுவர் ஓவியம் ஒன்று பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவுக்கு அமைய இலங்கையை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வீதியோரங்களிலுள்ள வெற்று சுவர்களை ஓவியங்கள் மூலம் அழகுபடுத்தும் பணியினை இளைஞர்கள், யுவதிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

வல்வெட்டித்துறையை சேர்ந்த வல்வை சுலக்ஸின் கலைவண்ணத்தில் தட்டிவானை ஓவியமாக வரைந்துள்ளார். சுமார் 16 மணித்தியாலங்களில் இந்த ஓவியத்தை வரைந்துள்ளார். பழைய நினைவுகளை மீட்கும் வகையில் அவர் வரைந்த ஓவியத்திற்கு பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

தமிழர் தாயகப் பகுதியில் ஆரம்பகாலத்திலும் போர்ச்சூழல் காலப்பகுதியில் பேருந்து மிகவும் குறைவாக இருந்த காலத்தில் போக்குவரத்து சாதனமாக தட்டிவான் போக்குவரத்து சாதனமாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதக்கது. 90 க்கு முன்னர் யாழ் நகரெங்கும் அதிகமான தட்டிவான் பயணங்களின் நினவுகள் அதுவும் பருத்தித்துறை, கொடிகாமம், நெல்லியடி இந்த நகரங்களில் அதிகமாக காணலாம். கடந்தகால தட்டிவான் பயணங்களை அழகான சுவர் ஓவியங்களாக நெல்லியடியில் காட்சிப்படுத்தியுள்ளனர். எமது ஆரம்பகால வாழ்க்கையை ஞாபகப்படுத்துவதாக பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர்…..பானு