யேர்மனி எசன் மாநகரில் ஒளிவிழா 23.12.2017 சிறப்பாகநடந்தே றியது

யேர்மனி கத்தோலிக்க ஆன்மீகப்பணியக எசன் பங்குமக்களின் ஒளிவிழா எசன் மாநகரில் சிறப்பாக 23.12.2017 அன்று நடந்தேறியது.ஒளி வணக்கத்துடன் ஆரம்பித்து ,இசை, நடனம், நாடகம் என முத்தமிழும் பரிணமிக்க யேசு பாலனின் வருகையை சிறுவர் சிறுமியர் அழகாக எடுத்துக்காட்டினர்.திருமதி .அனா முரளியின் நெறியாள்கையில்,பங்குமக்களின் அனுசரணையுடன் ,அவைத்திலகம் பாலாவின் இனிய தொகுப்பில் , மண்டபம் நிறைந்த மக்களை பரவசத்தில் ஆழ்த்திய ஒளிவிழா என்றால் மிகையில்லை. அருட்பணியாளர் நிரூபன் அவர்களின் ஆசியுரை நெஞ்சங்களை ஆன்மீகச் சிந்தனையில் நினைத்தது.

 

ஒளிப்படங்கள் ..செய்தி. தமிழருவி நயினை விஜயன்.