யேர்மனி ஸ்ரீ நவதுர்க்காதேவி வூப்பெற்றால் ஆலய புத்தாண்டு பொங்கல் விழா


யேர்மனியில் வூப்பெற்றால் நகரில் 18.01.2020 புத்தாண்டு பொங்கல் விழா மிக சிறப்பாக இடம்பெற்றது. வூப்பெற்றால் தமிழாலயம் மற்றும் ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயம் இனைந்து இவ் நிகழ்வு இடம்பெற்றது. பெரியோர்கள், பிரமுகர்கள் முன்னிலையில் அவர்களோடு கலாச்சார புத்தாண்டு பொங்கல் விழாவை கலாச்சார விழுமியங்களை கண்முன் நிறுத்திய கலைஞர்கள், பயிற்றுவிப்பாளர்களுக்கும், தமிழ், கலை, கலாச்சாரம் வளர்க்கும் சான்றோர்களுக்கும் எடுத்துரைத்தார்கள். எமது கலாச்சாரம் அழியாது என எடுத்துக் காட்டாக காத்தவராயன் கூத்து ,கரகாட்டம்,இசை மழை,போன்ற பல நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது. கலைஞர்கள் அனைவரையும் மதிப்பளித்து கொளரவிப்பு இடம்பெற்றது.