லக்ஷ்மன் சுருதி ஏற்பாட்டில் இயக்குனர் நடிகர் பார்த்தீபன் அவர்களை சந்தித்தவேளை சிபோ சவகுமாரன் !

எனக்கு பிடித்த இயக்குனர் சிலரை சந்திக்கும் ஆவலும் இனிதாக அமைந்தது. இயக்குனர் நடிகர் பார்த்தீபன் அவர்களை அவரது இல்லத்திலேயே சந்திக்கும் வாய்ப்பினை தென்னிந்திய இசை வல்லுனர்களில் ஒருவரான திரு.லக்ஷ்மன் சுருதி அவர்களின் ஏற்பாட்டில் கிடைத்தது. அவருடனேயே அங்கு சென்றதும் அவராகவே என்னை திரு பார்த்தீபனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். புதிய பாதையில் இருந்து ஒற்றைச் செருப்பு வரை பேசினோம். ஒற்றைச் செருப்பு பற்றி எனது விமர்சனத்தை கேட்டார். முடிந்த வரை என் கருத்தை பகிர்ந்தேன். மகிழ்ந்தார் எனது குறும்படடங்கள் பற்றி கேட்டறிந்தார்.ஆரோக்கியமான கருத்துக்களை எடுத்துரைத்தார்.உங்களுடன் துணை இயக்குனராக சிறிது காலம் பணியாற்ற வேண்டும் என்ற என் விருப்பினை தெரிவித்தேன்.திரு லக்ஷ்க்மன் அவர்கள் ஈழத்து படைப்பாளிகள் பற்றி விளக்கிச்சொன்னார். இவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய தேவைகளையும் கூறினார். எங்களுடன் அங்கு வந்திருந்த எமது ஈழத்து மூத்த கலைஞர் திரு தயாநிதி தம்பையா அவர்களும் அவரின் கருத்துகளை எடுத்து சொன்னார். எந்த வித மறுப்பும் தெரிவிக்காமல் தனது அடுத்ததயாரிப்பில் என் வசதிகளை பார்த்து இணையும் படி கூறியுள்ளார்..அவரோடு உரையாடிய தருணம் எனக்கு மிகவும் பிரியோசனமாக இருந்தது.
மேலும் சில பெண் குறும்பட இயக்குனர்களுடனும் உரையாடினேன்.
ஒரு கல்லில் இரு மாங்காய் போல் இந்திய பயணம் பயனுள்ளதாக அமைந்ததில் பேரானந்தமே…
எமக்கான படங்களை நாமே படைப்போம்.
அதற்கான தேடலை மேற்கொள்வோம்..
நன்றி.சிபோ சவகுமாரன்