லாபூஷணம் மூ.சிவலிங்கம் எழுகோலமும் என்ற நூலின் வெளியீட்டு விழா இன்று 06.04.2019

க எழுதிய சித்தர்களும் சிவபூமி மண்ணின் எழுகோலமும் நூலின் வெளியீட்டு விழா இன்று 06.04.2019 இணுவில் மஞ்சத்தடி அருணகிரிநாத சிவசுப்பிரமணியர் மண்டபத்தில் இடம்பெற்றது.
.
கலாபூஷணம் சைவப்புலவர் சு.செல்லத்துரையின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் செஞசொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் பிரதம விருந்தினராகவும் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் பேராசிரியர் க.தேவராசா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர். 
.
பெரியசந்நியாசியார் நினைவுரையை கலாநிதி கந்தையா ஸ்ரீகணேசன் ஆற்றினார். நூலின் வெளியீட்டுரையை நான் ஆற்றினேன். 
.
நிகழ்வின் போது கலாபூஷணம் மூ.சிவலிங்கம் அவர்களுடன் எடுத்துக் கொண்ட படம் இணைப்பில் உள்ளது. ((வலம் இருந்து இடமாக இரண்டாவதாக நிற்பவர்)
.
ஓய்வு பெற்ற கிராம அலுவலராகிய அவருக்கு தற்போது 85 வயது. 70 வயதில் எழுதத் தொடங்கியவர் தற்போது (15 வருடங்களில்) 29 (பெரிய) நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் பெரும்பாலானவை இணுவில் கிராமத்தின் பெருமைகளை எடுத்தியம்புவனவாக உள்ளன.