வஞ்சகம் நிறைந்த பூமில்

நடந்தவை எல்லாம்
நலமாய்த்தான் உள்ளது
ஏனோ தெரியவில்லை
கவலையும் சேர்ந்து
இருக்கின்றது!

நடை பழகிய பாதைகள்
பதுங்கி நடக்க அழைக்கின்றது
முன்னே பாசம் என்ற
போர்வையில் கயவர்கள்
நடமாடுகின்றனர் என்று!

என்ன செய்வது
எனத் தெரியவில்லை
பாசம் என்று போய்
உயிர் திறப்பதா இல்லை
உயிரினைக் காப்பதா என்று!

வஞ்சகம் நிறைந்த பூமில்
நெஞ்சமில்லாத அரக்கர்களின்
இறக்கம்தான் அதிகமாய்
உள்ளது கல்லறைகளைப்
பார்க்கும் போது புரிவீர்கள்
இன்று!

பயந்து நடங்குகின்றது
பாசமில்லாத பாசக் குரல்
ஒன்று விரல் ஒன்று
சிதைந்து கிடப்பதைக்
கண்டு!
தீர்வுதான் கிடைக்குமா
தீயாக நடனமாடும்
நரக உலகில்!!!

பொத்துவில் அஜ்மல்கான்