வணக்கம் ஐரோப்பா…. 2019..நெஞ்சம் மறக்குமா..

வணக்கம் ஐரோப்பா….
2019..
தாயகக் கலைஞர்களுக்கான
அங்கீகாரம்.
மக்கள் வெள்ளம்
மனதை நிறைத்தது.
இசைச் சங்கமம்
இனிமை சேர்த்தது.
சிறார்களின் நடனம்
கண்களுக்கு விருந்தளித்தது.
எமது நாடகம் மக்கள்
மனங்களில் விழிப்புணர்வை
ஏற்படுத்தியது.அரங்கம்
சிரித்தது..அழுதது.
மழைவெள்ள அனர்த்தம்
மனங்களை நனைத்தது.
உணர்வான மக்கள்
தாமாக முன் வந்து
பணம் கொடுத்தனர்.
விடுதலை வீரர்களின்
விடுதலைக்காக மண்டபத்திலேயே
சேர்ந்த பணம் கையளிக்கப்பட்ட நிகழ்வு
நெஞ்சை நிறைத்தது..
மொத்தத்தில் நிறைவைத் தந்த நிகழ்வாகியது.
நெஞ்சம் மறக்குமா..

 

கலைஞர்தயாநிதி அவர்களின் பதிவாக வந்த தகவல்