வன்கூவரிலிருந்து ஒரு குரல்…. வாழ்த்துக்கள்

தமிழீழத்தாய் ஈன்ற சங்கத்தமிழ்ப்
புதல்வர்களே!
தரணியெங்கும் பவனி வரும்
தார்மீகக் கலைஞர்களே!
அன்னைத்தமிழால்
அரங்கமெங்கும் அலங்கரித்து,
அதிரவைத்து
ஆனந்தம் அளித்து வரும்
அறிவுச் சிகரங்களே!
சிரிக்க வைத்து சிந்தனையைத்
தூண்டும் சீராளர்களே!
காவியக் கதாநாயகர்களே!
கலைஞர்களாய் ரசிகர்களை
களிப்படைய வைக்கும்
கண்ணியவான்களே!
“ஞானம் பிறந்தது” எனும் நல்வழி
நாடகத்தில் ஒன்று சேர்ந்து,
“நையாண்டி மேளத்தில்” நகைச்சுவை
சேர்த்திட்டாலும்,
நற்செய்திகள் பலப்பல
நச்செனவே தெரிவித்து,
“புரோக்கர் பொன்னம்பல”மாய்
இன்று பூரிக்க வைப்பவர்களும் இவர்களே!
படைப்பாளிகள் சமூகத்தில்
பாங்கான இடம் பெற்று
பாரினில் புகழீட்டும்
பண்பான நாயகர்களே!
எட்டுத்திக்கிலும் வலம் வந்து
எங்கும் தமிழ் மணக்க
இவர்கள் பணி தொடர
இதயங்கனிந்து வாழ்த்துகிறோம்.

வன்கூவர்
கனடா மஞ்சுமோகன்