வறுமையிலும் சாதிக்கத் துடிக்கும் மாணவன் ஜெயநீதன் புதிய இசைக் கருவியை கண்டு பிடித்துச் சாதனை படைத்துள்ளார்.

வறுமையிலும் சாதிக்கத் துடிக்கும் மாணவன் ஜெயநீதன் புதிய இசைக் கருவியை கண்டு பிடித்துச் சாதனை படைத்துள்ளார்.

இராமநாதன் நுண்கலைத் துறையில் இறுதியாண்டில் கல்வி கற்கும் இவர் ஜீவ ஜெய நாதம் என்னும் புதிய இசைக் கருவியைக் கண்டுபிடித்துள்ளார்.

அதனை யாழ் உரும்பிராய் இந்துக் கல்லூரியில் இடம் பெற்ற ஆசிரியர் பயிற்சிச் செயலமர்வில் வெளியிட்டுள்ளார்.

கிடைக்கின்ற வேலை எதுவாயினும் செய்து கல்வி கற்றுக் கண்டு வாழத் துடிக்கும் இம் மாணவன் சூழல் சார்ந்த பல கண்டுபிடிப்புக்களையும் வரைந்து வைத்துள்ளார். ஆனால் பணவசதி இல்லாத நிலையில் உள்ளார்.

இவரின் ஆர்வத்தை ஊக்குவித்து நல்லுள்ளம் படைத்தவர்கள் உதவுங்கள், இதிலும் கொடுமை என்னவென்றால் இம் மாணவனின் திறமை இதுவரை பகிரங்கப்படுத்தப்படாமல் இருந்தது தான்…