„வலியெனும் பெருமருந்து“



தேகத்தின் மேல்
சிவப்பு ஆடைகள்,
சற்றுத்தூரத்தில் 
செங்குருதி ஆறு,
அங்கே“
கழுவப்படுகின்றன 
காயங்கள், 
வலியெனும் பெருமருந்தால், 
கதறல் மட்டுமே காட்சியாய்
அதுவே என்றும் நீட்சியாய்,
இன்றும் தமிழரின் சாட்சியாய்,

தே.பிரியன்