வல்லவனே

பிரபஞ்சத்தின்
பேரொளி நீ.
அநீதியை தகர்க்கும்
போராளி.
வையகத்தில்
வீர வரலாறு நீ.
காவியங்களில்
நேர்த்தியானவன் நீ.
சர்வத்தின்
கர்வமதை
அடக்கியவன் நீ.
சத்தியத்தின்
காவலன் நீ.
சாணக்கியத்தில்
வல்லவன் நீ.
அவதார
புருஷன் நீ.
தமிழினத்தின்
அடைடயாளம் நீ.
எதிரிகளுக்கு
சிம்ம சொர்பனம் நீ.
ஞானமும்
தீர்க்கதரிசனமும்
ஆற்றலும் நீ.
அன்பும் அறனும்
காத்தவன் நீ.
கருணையின்
வடிவமும் நீ…
உங்கள்
தியாகம் விஞ்சிட
வையத்தில்
இனியொரு
பிறப்புமில்லை…
வாழிய நீ வாழியவே…

ஆக்கம் கலைஞர் ரி.தயாநிதி