வள்ளுவர்புரம் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான கெளரவிப்பு விழா!

(வெள்ளிக்கிழமை02.02.2018, ) ஈழத்தின் வள்ளுவர்புரம் மு/பாரதி மகா வித்தியாலயத்தில் இருந்து பல்கலைக் கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கும்(2016, 2017), இம்மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்குமான கெளரவிப்பு விழா காலை 09.30 மணிக்கு இடம்பெறும். மு/பாரதி மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீட பீடாதிபதி பேராசிரியர் தி.வேல்நம்பி அவர்களும், சிறப்பு அதிதியாக முல்லைத்தீவு கல்வி வலயத்தின் நிர்வாகத்திற்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஞான ஆதவன் அவர்களும், கெளரவ அதிதியாக இலண்டன் CARRY EACH OTHER அமைப்பின் இயக்குநர் மரீனா அவர்களும் கலந்துகொள்வர்.