வவுனியா திரைக்கலைச் சங்கத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடல்

வவுனியா திரைக்கலைச் சங்கத்தின் ஏற்பாட்டில் FMI நிறுவனத்தில் இடம்பெற்ற ஆக்கபூர்வமான கலந்துரையாடலின் போது…..
ஈழ சினிமாவைப் பொறுத்தவரை தாயகத்தில் சிறந்த கட்டுக்கோப்புடன் நிர்வாக வடிவமைப்பில் இயங்கிக் கொண்டிருக்கும் வவுனியா திரைக்கலைஞர் சங்கமானது சிறந்த முன்னுதாரணமாகும், நான் வேற்று மாவட்டத்திற்குள் அடங்கியிருப்பினும் அதன் மேல் கொண்ட ஈர்ப்பால் அச்சங்கத்தில் என்னையும் இணைத்துக் கொண்டிருந்தேன்.
மற்றைய இடங்களிலும் குழுமங்களாகவாவது உருவாக்கப்பட வேண்டும் என்பதும் என் அவாவாகும்.
பிற்குறிப்பு – ஏன் யாழ்ப்பாணத்தில் நீர் தொடங்கலாம் தானே எனக் கேட்கலாம், இங்கு பல தடவை முயற்சிக்கப்பட்டு கை விடப்பட்டதாகும். இறுதியாக ஐங்கரன் முழு முயற்சியுடன் ஜீவேஸ் அண்ணாவுடன் சேர்ந்து ஆரம்பித்திருந்தாலும் ஐங்கரன் அவர்கள் ஒரு நபருக்கு பேசுவதற்கு மைக் கொடுக்க மறந்தகாரணத்தை அடிப்படையாக வைத்து ஒரு கலைஞர் அவருக்கு அடிக்கத் தேடித்திரிந்ததை அடுத்து அவரும் ஒதுங்கிக் கொண்டார்.