வான் மேகங்களே வசந்தத்தை தாருங்களேன்-ஜெசுதா யோ

தூரத்து மேகங்களே
தூறலாய் வாருங்களேன்
காடும் மலரும்
நீரால் மலர தூறுங்களேன்
ஆறும் குளமும்
ஏரியும் வாய்க்காலும்
நிரம்பி ஓட வாருங்களேன்
மழையென நீங்கள்
பூமிக்கு பூ தூவுங்களேன்

ஊர்விட்டு ஊர் போய் நானும்
உல்லாசம் பாட
வசந்தமாய் வாருங்களேன்
மேகங்களே கரு மேகங்களே
கவி படைக்க வாருங்கள்
தூறலாய் பூமியை நனையுங்களேன்

நஞ்சையும் புஞ்சையும்
செழித்து வளர்ந்திட
விவசாயி மனங்கள் எல்லாம்
மகிழ்வில் திழைத்திட
வாருங்களே வான் மேகங்களே
தூறலாய் பூமிக்கு வாருங்களேன்

வெப்பம் தாங்காது
வெதும்பி உடல்கள்
வெந்து போகுதிங்கே
மேகங்களே வாருங்கள்
மழைச்சாரல் கொண்டு
பூமியை நனையுங்கள்
வான் மேகங்களே
வசந்தத்தை தாருங்களேன்..

ஆக்கம் ஜெசுதா யோ