வார்த்தையால் கொல்லும் வஞ்சக மனிதம்,

“ அதுக்கு மண்டைபீஸ் எப்பவும் 
இப்படித்தான் கத்திக்கொண்டிருக்கும்“

வீசும் வார்த்தைகளில் 
புண்ணை தோண்டி புதையல் எடுக்கும் 
ஒரு சில நரம்பில்லா நஞ்சர்களே !

வலிகளில்
பழிக்கப்படும் நம் வாழ்வு,
வார்த்தைகளால் நசிக்கபடுவது 
எத்தனை வேதனை தெரியுமா?

பெரும் புயலில் இருந்து 
விடுபட்டு 
அந்த வடுக்களுடன் 
தேக நெருப்பில் நீந்தும் 
சன்னத் துகள்களை 
தாங்கி பயணிக்கும் உறவுகள் 
உன் இனமே தெரிந்து கொள் !
,

இப்படி வீசும் வார்த்தைகளால் 
கடந்துபோக முடியாமல் 
ஒடுங்கி ஒதுங்கி நசிபட்டு 
வலிகளின் சந்தையில் 
வரிசை கட்டி நிற்கின்றன
எங்கள் உறவுகள், 
புரிந்து கொள்ள மாட்டாயா?

„தயவு செய்து இனியேனும் கவனத்தில் கொள்க“

−தே.பிரியன்−