வாழ்க்கை!கவிதை ஜெசுதா யோ

வாழ்வில்
என்றும் எதுவும்
நிலையில்லை
இதை அடிக்கடி
இதயம் மறந்து போகிறது ….

இன்பம் துன்பம்
ஏற்றம் தாழ்வு
பெரிது சிறிது
உண்மை பொய்..
இதனையெல்லாம் புரியும் போது
வாழ்வே முடிந்து போகிறது….

வாழனும் என்ற ஆசை
நெஞ்சில் தோன்ற
வாழ்க்கை கல்லறையில் அர்ப்பணமாகிறது…

புரிதல்கள் இல்லாத
வாழ்வில்..
சந்தோசமும்
நிலையற்றுப் போகிறது….

வாழ்க்கை ஒருமுறைதான்
வாழ்ந்துவிட்டு போங்கள்
நியாயமான முறையில்,..

..

                                       ஆக்கம் ஜெசுதா யோ

.

Merken