வாழ்தலைப் பாடு..!கவிதை கவிஞர் தயாநிதி

 

முளை விடு
மூச்சு விடு
முயற்சி எடு
கிளை விடு
நிழல் கொடு..

நட்டவர்
பணி முடி
உற்றவர்
துயர் களை
வளம் பெறு.

நலன் காத்து
பலன் பெறு
பயன் படு.
ஓடு,,, தினம்
உயர தேடு..

உனக்கான
கூடு, அதுக்காக
பாடு படு
அவசரம் தவிர்
ஆனந்தம் சேர
அன்பைக் கொடு..

அன்பைத் தேடு
உன் அறிவுக்குள்
நாடு,காதலி,,
கருத்துக்களால்
ஒன்று படு..

கைக்கூலி
இல்லாமலே
கரம் பிடி
வரதட்சணையை
விரட்டு. மேலோர்
வாழ்வியலை
திரட்டு, அதையே
புரட்டு. நீயும்
பாடமாகலாம்.
வாழ்தலை பாடு…

ஆக்கம் கவிஞர்தயாநிதி