விடியல்…

வெய்யோன்
திரை விலக்கி
புவி தேடித் தினப்
பயணம்…
அவன்
ஔிகண்டு
மெய்யொன்று
மேனி சுமந்து
நீள் பயணம்..
கருவின்
ஊடுருவல்
உயிராகி
உருவமாகி
முதல் பயணம்..
பெண்ணாகி
வடிவம் கண்டாகி
எழுதாத விதியாகி
எழுகைக்கு பெரும்
தடையாகி அவள்
வாழ்க்கை பயணம்.
விடியாத
இருளுக்குள்
திராத போராட்டம்
இன்று இவளின்றி
இல் வாழ்க்கை
ஈடாட்டம்..
வினாக்களுக்கு
விடையாகி
விடியலுக்கு
படையாகி
எதிரிக்கும் தடையாகி
விண்ணுக்கும்
மண்ணுக்கும்
விளக்காகி
ஔிர்கின்றாள்..
படம் நன்றி
கந்தையா ஸ்ரீதாஸ்

ஆக்கம் கவிஞர் ரி.தயாநிதி