விட்டுப்போவதைவிட்டுவிடுங்கள்

புரிந்துகொள்ளாதவர்
பிரிந்துசெல்வதால்
கவலைகொள்ளத்தேவையில்லை
உண்மையான நட்பும்அன்பும்
இல்லாமலே பழகினார்கள்
என்பதை அறிந்துகொள்ளுங்கள்
போவதையோ போனதையோ
நினைத்து மனம் வருந்தாதீர்கள்
வாழ்விலே சொந்தம்என்று வந்தவர்களே
வாழ்நாள் முழுவதும் கூடிவாழ்வதில்லை
இடையில் வந்தவர்களா கூடிவருவார்கள்
நீங்கள் கூடிவாழ ஆசைப்படுங்கள்
அவர்கள் கூடிவரவில்லை என்றால்
விட்டுப்போங்கள்,விலகிப்போங்கள்
எப்போது ஓர்நாள் உங்கள் அன்பை
புரிந்துகொள்வார்கள் அப்போது
காலங்கள் ஓடிமறைந்துவிடும்
காலங்கடந்து வரும் சிந்தனைகளால்
எல்லாமே அவர்களுக்கு இழப்புக்கள்தான்
கருமேகங்கள் கூடிவந்து வானத்துச்சந்திரனை மறைக்கலாம்
ஆனால் மேகங்கள் கலைந்தவுடன்
வண்ணநிலவாய்ச்சந்திரன் தெரியும்
உண்மைகள் புரியும்
புரியாத எண்ணங்களாலும்
தடுமாறும் மனங்களாலும்
நல்லவர்களை இழப்பது
அவர்களின் மனதுக்கு
சந்தோஷம் என்றால்
போகட்டும் போகட்டும்
அவர்கள் என்றும் எங்கும்
நல்லாய் இருக்கட்டும்
என்று நினையுங்கள்
பிராத்தனை பண்ணுங்கள்
(கவிதை ••மயிலையூர்இந்திரன்)

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert