வினைப் பயன்.

நல்வினை தீவினை
அவரவர்
ஊழ்வினை .

வல்வினை தொடர்ந்திடில்
அழித்திடும்
வாழ்வினை .

வஞ்சனை வாதுகள்
எரித்திடும்
நெஞ்சினை .

மதுவினை குடிப்பவர்
இழக்கிறார்
மகிழ்வினை .

உறுவினை காட்டிடும்
வாழ்க்கையின்
சரிவினை .

சிறு வினை வளர்ச்சியே
நாளைய
பெருவினை .

பல வினை முடித்திடும்
மறுமையில்
செலவினை .

அழிவினை போக்கிட
பெற்றிடு
தெளிவினை .

கவிஞர். ஏரூர் கே. நெளஷாத்.