நல்வினை தீவினை
அவரவர்
ஊழ்வினை .
வல்வினை தொடர்ந்திடில்
அழித்திடும்
வாழ்வினை .
வஞ்சனை வாதுகள்
எரித்திடும்
நெஞ்சினை .
மதுவினை குடிப்பவர்
இழக்கிறார்
மகிழ்வினை .
உறுவினை காட்டிடும்
வாழ்க்கையின்
சரிவினை .
சிறு வினை வளர்ச்சியே
நாளைய
பெருவினை .
பல வினை முடித்திடும்
மறுமையில்
செலவினை .
அழிவினை போக்கிட
பெற்றிடு
தெளிவினை .