விழிப்பாயிரு..


கோபத்தில்
பொறுமை இழக்காதே.
வேகத்தில்
வார்த்தைகளை வீசாதே.
கவலையில்
கண்ணீர் வடிக்காதே.
சோதனைகளில்
துவளாதே.
வேதனைகளால்
வெந்து மாயாதே.
வெறுத்து விலகியவரை
தேடிப் போகாதே..
பழகியவரை
பாதியில் விடாதே.
பண்புகளை
ஒரு போதும் மீறாதே.
குத்திக்
காட்டுவோரையும்
சுட்டிக்
காட்டுவோரையும்
இனம் காண தயங்காதே.
உன் செயல்களை
உதாசீனம் செய்வோரை
ஏறெடுத்தும்
பார்க்காதே..
தூரங்கள்
கடந்தாலும்
நெஞ்சோரம்
சுமக்கும் ஈரம்
காய விடாதே..
பொல்லாத உலகம்
அறம் மறந்து
புறம் பாடும் விழிப்பாயிரு.

ஆக்கம் கவிஞர் தயாநிதி