***விழி விடு தூது***

கோபத்தால் குத்தூசியாகும் உந்தனிரு
கோரவிழிகளின் கோலமாறிவேன் நான்.
தாபத்தைத்தந்து தவித்து நிற்கும் உன்னது,
தத்தும் விழிகளை தாராளமாய் அறிவேன்.
மோகத்தாலெனை முழுமையாய் அள்ளும்.
மோகனவிழிகளின் மூர்க்கம் அறிவெனடி.
சிநேகமாகச் சிரிக்கும் உந்தன் இரண்டு சிருங்கார விழிகளின் சிலுமிசம் அறிவேன்.
நேசம் காட்டுமுன் நேர்த்தியான விழிகளின்
நேர்மையும் தூய்மையும்கண்டு நிறைவேன்
கண்ணே
கண்நேசன்