***வீசியெறிந்த- விதி ** கவிதை சதிநேசன்

 

விதி முறைகள் எனக்கு ஏதுக்கடி ,உன்
மதி முகத்தை காணத்தடுக்கும்- அந்த
மதிகெட்ட மூடர்கள் கூறும்,
விதி முறைகள் தான் எனக்கு ஏதுக்கடி -மானே!

விதி முறைகள் எனக்கு ஏதுக்கடி ,நாம்
சதிபதியாய் வாழத்தடுக்கும் -இந்த
சாதி மத பேதங்கள் கூறும் ,
விதி முறைகள் தான் எனக்கு ஏதுக்கடி.-தேனே !

விதி முறைகள் எனக்கு ஏதுக்கடி ,நான்
கதியற்று கலங்கி வாழ்கையில் நடு
வீதிக்குப்போக நேரினும், கைவிடேனுன்னை,
விதிமுறைகள் தான் எனக்கு ஏதுக்கடி.- பெண்ணே !!

மதி கொண்டு விதியை நாம் ,வீசியெறிவோம்
புதிய விதியொன்றை நாமே பெற்றெடுப்போம்.
சுதி சுத்தமாக வாழ்வை கீதமாக்குவோம்.இனியும்
விதி முறைகள் தான் எமக்கு ஏதுக்கடி.-கண்ணே !!!
ஆக்கம் சதிநேசன்