#வீரத்_தமிழன்_வீரவணக்கம்


_
அஹிம்சைக்கு அடி வைத்த
தியாகத்தின் தீப்பந்தம் எம் தீலிபன்
இன்று ஞாபகத் தூறலாய்
மழை பொழிகிறான் எனக்குள்

நல்லூர் வீதியில்
நாவறண்டு நாட்டிற்காக
தனியொருவனாய் தடையுடைக்க
தாகம்கொண்டவன்
கண்டுகொள்ளவில்லை பலர்

தன் இளவயதைப்
புறம்தள்ளி ஆசைகளை
அடித்துடைத்து அநீதிக்காய் எழுந்து
சா மேடையமைத்து
சரித்திரம் தீட்டத் துணிந்தவன்

காமத்தைக் கடந்து
கனப்பொழுதுகளில் அகத்தால்
தாயகத்தைக் காதலித்து
ஓவியம் பேசிய காவியக் காதலன்

பசியை மாத்திரம் உணவாக்கி
பாசத்தில் உறைந்து
பச்சிளம் குழந்தைகளை நினைத்து
உணவின்றி உருக்குலைந்தவன்

காந்தியைப் போற்றும் உலகு
இவன் கடந்ததை தூற்றுகிறது
யாருக்காய் இவன் பிறந்தான்
எதற்காக இவன் இறந்தான்

காலங்காலமாய் பேசுவேன்
நீ தாயகத்தைக் கனம்செய்து
காதல் செய்தவன் என்று
காவியனே போற்றுகிறேன்
நீ கடந்து விடவில்லை கலந்து விட்டாய்

வன்னியூர் கிறுக்கன்