வெயிலும் குளிரும்…!கவிதை ஜெசுதா யோ

 

ஆண்டவன் விளையாட்டில்
இதுவும் ஒன்றல்லவோ..!!

காலத்தின் கோலமதில்
கடும் வெயிலில் காய்ந்து போகும் அங்கங்கள்

காற்றும் இன்றி மழையும் இன்றி
கருகிப் போகும் நிலையில் எரிக்கும் வெயிலுக்கு ஈடுகொடுக்க முடியாது
இறப்புக்களும் நோய்களும் என நடந்தேறுகிறது நம் நாட்டில் …//

ஆனால் ..
வேடிக்கை பார்த்தீர்களா
பாரினிலே இன்னும்
படும் பாடு குளிரினால்
சொல்ல முடியாத சோகங்கள்
மழையும் காற்றும்
இடியும் மின்னலுமாய்
உடல் விறைக்க இன்னும்
முகம்தெரியாது முக்காட்டுக்குள் நாம்….

ஆக்கம் ஜெசுதா யோ

Merken