வெள்ளைநிறத்திலே ஒரு வாத்து…!கவிதை.ரதிமோகன்

வெள்ளைநிறத்திலே ஒரு வாத்து கண்டேன்
உள்ளம் வானிலே பறக்கக் கண்டேன்
வாத்துக்கூட்ட தலைவன்போலே
முன்நின்று நீந்திச்செல்லக்கண்டேன்..,

குவாக் குவாக் அழைக்கும் ஒலி ஒன்று கேட்டேன்
அவ்வொலியில் அணி ஒன்றுசேரக் கண்டேன்
ஒற்றுமையும் பகிர்ந்துண்ணலும்
மானிடம் அதை கற்க வேண்டுமென்று ஆசை கொண்டேன்..

சிறகு விரிப்பினிலே அங்கு
சுதந்திரக்காற்றொன்று
என்னுள்ளே பரவ கண்டேன்
சிறகிழந்த பறவைகளாய் தவிக்கும்
பெண்களை கருத்தினிலே கொண்டேன்…

சிறகுகள் வேண்டி படைத்தவனை கேட்டேன்
சிந்தை இருந்தால் இமயம் தொடலாம்
அசரீரி ஒன்று கேட்டேன்
வாத்தின் பின்னே என் சிந்தனைகளும் தொடர்ந்து செல்லக் கண்டேன் ..
விழி திறந்தேன்..மொழி மறந்தேன்..,

ஆக்கம் ரதிமோகன்