இரவுண்டு பகலுண்டு!

இரவுண்டு பகலுண்டு
விடியலும் நித்தமுண்டு
வழமைபோலவே…எல்லாம் இங்கே
ஆனால் ,.!!!
விடிவு மட்டும் இல்லை
நம் தமிழருக்கே,..!!
நாளும் பொழுதும்
பலியாகும் உயிர்கள் எத்தனை
பாலியல் வன்கொடுமைகள் எத்தனை
இன்னும் எத்தனை
இலை மறைகாயாக
வெளிவராத சோகங்கள்
……
ஒரு நாள் மாறாதா
மீண்டும் கரிகாலன்
தேசம் காக்க வரமாட்டானா?
என்ற ஏக்கத்தோடே
ஒவ்வொரு விடியலையும்
எதிர்பாத்து காத்திருக்கு
பல மனங்கள் இங்கே …,.
ஜெசுதா யோ