தூத்துக்குடியில் தூக்கிவீசப்பட்ட தமிழருக்கு அஞ்சலிகள்..

தூத்துக்குடியில் தூக்கிவீசப்பட்ட தமிழருக்கு அஞ்சலிகள்..
தமிழகம் தமிழர்களின் தாயகமாம்
அங்கேயுமில்லை ஒரு பாதுகாப்பு
நாதியற்றவனாக நானிலத்தில்
கொடுமைபடுத்தப்படுகிறாய் தமிழா ..

நியாயம் கேட்டால் நீளுகிறது துப்பாக்கி
நீதி நியாயற்ற அரசியல் சதுரங்கத்தில்
பகடைக்காய்களாக உருளுகின்ற தமிழ்த்தலைகளுக்கு எந்த மன்றும்
தராது ஒரு நீதி..

பொறுத்தது போதும் தமிழகத்தமிழா
பொங்கி நீ எழாவிட்டால் ஏழரைக்கோடி
தமிழருக்கும் ஏழரைச்சனிப்பிடிக்கும்
தமிழன் வரலாறு தலைகீழாக மாறும்

கந்துவட்டிக்கும் (சீ)தன,சாதிசமய
சண்டைக்கும் தீயில் கருகும் தமிழகமே
இனியாவது நல்லதை சிந்தித்து
தமிழன் என்ற உணர்வோடு விழிப்பாயா?

குட்டக்குட்டக் குனிபவன் தமிழனில்லை
குதித்தெழுந்து வா தமிழ்நாட்டுத்தமிழா..
ரதிமோகன்