ஆத்தோரம் வந்து நின்னு பாடுறியே பாவலா.. 
பூச்சூடி வந்து என்னை மணப்பாயா ஆவலா…
காத்தோடு கலந்திருக்கு உன் பாடலா – என்
கவித்தென்றல் நீ எனக்கு காதலா..

என் பார்வை உனை சுட்டதோ..
என்னில் உன் காதல் முளைவிட்டதோ..
ஏங்காமல் எனை தாங்க வா..
எனையாளும் என் மன்னவா..

கொத்தான மல்லிகையில் 
தேன் குடிக்க வா..
குற்றால அருவியில நீ 
குளிக்க வா…
சித்தாடை கட்டி நிற்கும்
நான் வெண்தாமரை- என்னை
இப்போதே வந்துரசி என் மாமனே..

முத்தான மாங்கனியில்
முக்கனியின் சுவை..
முத்தாடலாம் வா..முந்நூறு இரவை..
சொத்தாகத் தா உன்னோட உறவை..
செத்தாலும் நான் உன்னோடு வாழ்வேன்

கவித்தென்றல் ஏரூர்