Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 ஜேர்மனி எசன் நகரில் 23.2.2020 இல் நடைபெற்ற தமிழ்நாடு சஞ்சிகைவெளியீட்டு விழா – stsstudio.com

ஜேர்மனி எசன் நகரில் 23.2.2020 இல் நடைபெற்ற தமிழ்நாடு சஞ்சிகைவெளியீட்டு விழா

ஜேர்மனி எசன் நகரில் 23.2.2020 இல் நடைபெற்ற தமிழ்நாடு சஞ்சிகை
„இனிய நந்தவனம் “ யேர்மனி சிறப்பு இதழ் வெளியீட்டு விழா பண்ணாகம்.கொம் பிரதமஆசிரியர் ஊடகவித்தகர் திரு. இ. க. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. விழாவை தமிழருவி நிறுவனர் தமிழ்வேள் திரு. திருமதி. நயினை விஜயன் அவர்கள் மிக ஒழுங்காக ஒழுங்கமைத்தனர்.
வரவேற்புரையை தமிழ்வேள் திரு. நயினைவிஜயன் வழங்கினார். தலைமையுரையை அவைத்தலைவர் வழங்கினார். சஞ்சிகை முதல் பிரதியை கம் காமாட்சி அம்பாள் ஆலய அறங்காவலர் ஆலயபிரதம குரு சிவசிறீ பாஸ்கரக்குருக்கள் வெளியிட பிரான்ஸ் ஐ. ரி. ஆர் வானொலி இயக்குனரும் உ. த. ப. இயக்க ஐரோப்பியத் தலைவர் திரு. விசு செல்வராசா அவர்கள் பெற்றுக்கொண்டார். அவ்வமையம் இனிய நந்தவன பிரதம ஆசிரியர் திரு.ந.சந்திரசேகரன் அவர்களும் மற்றும் சிறப்பிதழை அலங்கரித்த பிரமுகர்களும் கலந்து வாழ்த்துரைகள் வழங்கி சிறப்பித்தார்கள். நடனங்கள், வீணை இசை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. இறுதியில் சிறப்பிதழ் ஆசிரியர் ஏற்புரைவழங்கினார் நிகழ்ச்சி அனைத்தையும் அவைத்திலகம் பாலா அவர்கள் தொகுத்து வழங்கினார்.