Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 தாயகப்பாடகர் சுகுமார் அவர்களின் 60 வது பிறந்தநாள் வாழ்த்து 22.04.2020 – stsstudio.com

தாயகப்பாடகர் சுகுமார் அவர்களின் 60 வது பிறந்தநாள் வாழ்த்து 22.04.2020

ஈழத்தில் வாழ்ந்துவரும் பிரபல
பாடகர் சுகுமார் அவர்களின் 60 வது பிறந்தநாள் ஆகிய இன்று இவர் தனது பிறந்தநாளை மனைவி. பிள்ளைகள். பேரப்பிள்ளைகள்,உற்றார்,உறவுகளுடனும், நண்பர்களுடனுமாக இணைந்து தனது பிறந்தநாளை கொண்டாடும் இவரை அனைவரும் வாழ்தி நிற்கும் இவ்வேளை எஸ்.ரிஎஸ்.இணைய நிர்வாகமும்

EELATTAMILAN.STSSTUDIO.COM

EELAOLI.STSSTUDIO.COM

STSTAMIL.STSSTUDIO.COM

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்TV‌ 

கீழ் மகன் முகிலரசன். வாழ்த்து இணைக்கப்பட்டுள்ளது

எங்கள் தேசக் குயிலுக்கு
அகவை 60
அப்பா !
என் தாய் பாலுடன்
பாசத்தையும் ஊட்டி வளர்த்தாள்,
நீங்கள் ! எனக்கு வீரத்தையும்
சுரங்களையும் அல்லவா
ஊட்டி வளர்த்தீர்கள்
எனக்குள் இருக்கும்
இசையின் வேர்கள்
உங்கள் மூலவேரோடுதான்
பற்றியிருக்கிறது
உங்கள் குரலின்
தேச உணர்வுகள்
என்னுள் ஆழப்பதிந்துள்ளது
தங்கள் குரலைக் கேட்டபடியே
களம் சென்ற நாளை
நான் மறவேன்
நீண்ட காலம் உங்களை
பிரிந்தே வாழ்கிறேன்……
ஓர் தந்தையின்
பாச உணர்வை
நான்… இப்பொழுது
ஆழமாய் உணர்கிறேன்
என் மகனை,மகளை
பிரிந்து வாழும்
இதய வலியில்
உங்கள் முகம் தெரிகிறது.
காலச் சுழற்சி வழி திறக்கும்
உங்கள் அருகில்
நான் இருப்பேன்.
அப்பா!
நீங்கள் ஓர்உன்னதமான
கலைஞன்
உரமும்,உறுதியும்,
தேசப்பற்றும் கொண்ட
மகா கலைஞன்
அறுபதாவது அகவை காணும்
தங்களை அன்பும்,பாசமும்
பொழிந்து வாழ்த்துகிறேன்
பிரிவின் கண்ணீர் துளிகள்
சக்தி வாய்ந்தது .அந்த சக்தி
உங்களோடு என்னை
இணைக்கும் என்பது உறுதி.
வாழ்க பல்லாண்டு நீடூழி
என்றும் பாசமிகு
மகன் முகிலரசன்.