Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 பொங்கல் திருநாள் – stsstudio.com

பொங்கல் திருநாள்

தமிழர்தம் திருநாளாய்
தரணியிலே மலர்ந்துவரும்
பொங்கல் திருநாளே
பூந்தமிழர் புத்தாண்டு !

அறுவடையின் பின்வரும்
பொங்கல்ப் பெருநாளில்
புத்தாடை புனைந்து
பொலிவுறத் தோன்றும் மக்கள் !

தமிழர்தம் பண்டிகையைப்
பரணி பாடிய
பண்டைத் தமிழர் பாரெங்கும்
கொண்டாடி மகிழ்ந்தனர் .

புதுப்பானை கையெடுத்துப்
புத்தரிசி அதிலிட்டு
சர்க்கரை பாலோடு
நெய்யும் கலந்துவிட்டால்
தித்திக்கும் பொங்கல்
திசையெங்கும் மணங்கமழும் .

பயிர்வளர வயற்காட்டில்
பகலெல்லாம் வியர்வைசிந்தி
உழுது பயனளித்த
உழவர் தம்மை போற்றி
உவகையுறும் உலகத் தமிழர் !

உழவுத் தொழிலுக்கு
உறுதுணையான எருதுகளுக்கும்
பொங்கலின் மறுநாள்
பட்டிப் பொங்கலிட்டு
நன்றிதனை நவின்றிடும்
நந்தமிழர் மாண்பு . . . .

உழைப்பவர் உயர்வடைய
உழவர் தலைமிர
உதவிநின்ற உதய சூரியனுக்கு
பொங்கிவரும் பொங்கலைப்
பொலிவுறப் படையல் . . . .

மஞ்சள் , இஞ்சி , கரும்பு
மணங்கமழ் பூக்கள்
முக்கனி , மாதுளை முத்துக்கள்
அத்தனையும் ஆதவனுக்குப் படையல் . . . .

மாவிலைத் தோரணம் கட்டி
மனையதன் முற்றத்திலே
கதிரவன் கதிரொளி பாய்ச்ச
மண்பானையில்ப் பொங்கலிட்டு
மகிழ்ந்திருந்தோம் அந்நாளில் !

நான்கு சுவர்களுக்குள்
மின்சார அடுப்பினிலே ,
கதிரவன் துயிலும் பொழுதான
கடுங்குளிர் காலத்திலே ,
அந்நிய தேசங்களில்
அகங்குளிரப் பொங்குகின்றோம் . . . .

பொங்கல் பொங்கி வழிய
புன்னகை இதழோரம் மலர
சுற்றம் சூழ்ந்திருக்க
சுகித்திருந்த காலங்கள்
மனமெனும் தரையிலே
அழியாத கோலங்கள் .

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்

இரா . சம்பந்தன் – ஜேர்மனி

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert