விந்தை உலகம்

பரத்தையர் பத்தினிக்கு
தீர்ப்புச் சொல்லும்
வேடிக்கை உலகம்

சமயல் சரியில்லையென்று
சட்டிகள் சண்டை செய்ய
சாப்பிடுபவர்கள் சமாதானமாய்

கருணையைப் பற்றி
கட்டாயப் பாடம் நடாத்தும்
கசாப்புக் கடைக்காரர்கள்

காலங்காலமாக
கறாத்தை தின்றுகொண்டு
நண்டு ஹறாமா மக்ரூஹா
விவாதம்

ஊரைப் பிடித்து
உலையில் போட்டுக் கொண்டு
உருக்கமான உபன்யாசம்

விடுமுறை பற்றி
வேதாந்தம் பேசும்
வெள்ளைப் பௌர்ணமிகள்

வானத்தைக்கீறி
வைகுண்டம் செல்வதாக கூறும்
வாக்குறுதிக்கு
சாமரம் வீசும் சனங்கள்

கோரிக்கை வைப்போரின்
கோவணத்தை உருவுமாறு
கோடிட்டுக் காட்டும்
கோட்டான்கள்

பட்டுக்கூஞ்சத்தை
கட்டிக்கொண்டு
பகட்டுக்காட்டும்

கவிஞர். ஏரூர் கே. நெளஷாத்