Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 கற்சிலைமடு அ.த.க.பாடசாலையில் கௌரவிப்பு விழா – stsstudio.com

கற்சிலைமடு அ.த.க.பாடசாலையில் கௌரவிப்பு விழா

ஒட்டுசுட்டான் கல்விக்கோட்டத்தில் மூத்தபாடசாலையாக அமைந்த கற்சிலைமடு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையில் 29 மாணவர்கள் சித்திபெற்றனர்.

-ஒட்டுசுட்டான் கோட்டத்தில் அதிகூடிய தர பெறுபேறுகளை இருமாணவிகள் (6A)பெற்றனர்.
சிவகுமாரன்–கீர்த்திகா6A,2B,C
சுந்தரமூர்த்தி–விதுசனா 6A,B,C
ஆகியோரே இப்பெறுபேற்றைப் பெற்றவர்களாவார்.

-கற்சிலைமடு அ.த.க.பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் 05.04.2017 புதன் கிழமை அன்று அதாவது நேற்றைய தினம் சாதனை மாணவர்களையும் ,கற்பித்த ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையில் சிறப்புற நடைபெற்றது.

-நிகழ்வுகள் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் வன்னியூர் செந்தூரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

-பாடசாலையின் எதிரேயுள்ள நாகம்மாள் ஆலத்தின் முன்றலிலிருந்து விருந்தினர்கள்,அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள் இன்னிய வரவேற்புடன் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

-மங்களவிளக்கேற்றல்,அகவணக்கத்தைத் தொடர்ந்து வரவேற்புரையினை பழையமாணவர் சங்கத்தின் ஆலோசகர் “சுதேச வைத்தியத் திலகம்” நா.வன்னியசிங்கம் அவர்கள் வழங்கினார்.

-பிரதம விருந்தினராக ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் சார்பில் நிர்வாக உத்தியோகத்தர் திரு இந்திரகுமார் அவர்களும்,

-சிறப்பு விருந்தினர்களாக ஒட்டுசுட்டான் வைத்தியசாலை அதிகாரி வைத்தியகலாநிதி திருமதி நிரேகா அவர்களும், துணுக்காய் கல்வி வலய கல்வி அபிவிருத்தி உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு.ஜெயபாலன் அவர்களும் , ஒட்டுசுட்டான் கோட்டக்கல்விப்பணிப்பாளர் திரு.பங்கயச்செல்வன் அவர்களும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

-கௌரவவிருந்தினர்களாக கற்சிலைமடு கிராம அலுவலர் திரு.பாலசுப்பிரமணியம் அவர்களும், அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.வீரா அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

-தலைமையுரை, ஆசியுரை என்பவற்றைத் தொடர்ந்து அதிபர் திரு.பன்னீர்ச்செல்வன் அவர்களின் சிறப்புக் கருத்துரையுடன்,விருந்தினர் உரைகளும் இடம்பெற்றது.

ஆசிரியர்கள் நினைவுப்பரிசில்,நினைவுக்கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

-ஆசிரியர்கள் சார்பில் தமிழ்ப்பாட ஆசிரியர் திரு.ரதீஸ்வரன் அவர்கள் அனுபவப்பகிர்வை வழங்கினார்.

-சாதனை அதிபர் பன்னீர்ச்செல்வன் அவர்கள் பழையமாணவர் சங்கத்தினரால் பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப்பட்டார். பழையமாணவர் சங்கத்தின் பொருளாளர் வே.சிவகுமார்,முன்னாள் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் திரு.விஜயமோகன் ஆகியோர் அதிபருக்கான கௌரவத்தை வழங்கினார்கள்.

-நன்றியுரையினை பழையமாணவர் சங்கத்தின் ஆலோசகர் ,கிராம அலுவலர் திரு.நா.ரஞ்சிதகுமார் அவர்கள் வழங்கினார்.
நன்றியுரையினைத் தொடர்ந்து மதியபோசன விருந்துபசாரத்துடன் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.
~வன்னியூர் செந்தூரன்~

Merken