Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 கவிச்சோலை இன்பத் தமிழும் நாமும் எனும் நிகழ்வின் ஒளிப்பதிவில் 26.06.2021 கவிஞர் அருட்கவி ஞானகணேசன்அவர்கள் இணைந்துகொண்டுள்ளார் – stsstudio.com

கவிச்சோலை இன்பத் தமிழும் நாமும் எனும் நிகழ்வின் ஒளிப்பதிவில் 26.06.2021 கவிஞர் அருட்கவி ஞானகணேசன்அவர்கள் இணைந்துகொண்டுள்ளார்

STSதமிழ் தொலைக்காட்சியில் மீண்டும் ஒரு புதிய நிகழ்வாக கவிச்சோலை எனும் நிகழ்வு இன்பத் தமிழும் நாமும் ஔிபரப்பாகிவருகின்றது

இதில் இன்று கனடாவில: இருந்து கவிஞர் அருட்கவி ஞானகணேசன்
அவர்கள் கனடிய மண்ணில் பொறியியல் துறையில் பயின்று கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கனடாவில் civil engineering technologist ஆகக் கடமையாற்றிவருபவர். இவரும் அமரர் பண்டிதர் அலெக்ஸசாந்தர் கவிநாயகர் கந்தவம் ஆகியோரைக் குருவாகக்கொண்டு யாப்பிலக்கணத்தைப் பயின்று கனடியமண்ணில் பலமேடைகளில் வானொலிகளில் வானொளி நிகழ்ச்சிகளிலும் கவிதை படைத்துவருகின்றார். இவர் யாப்பிலக்கணம் கற்றுமுன்னரே இறையருளால் இயற்கையாகவே கவிதை எழுதத் தொடங்கினார்.
கனடா ஸ்ரீ வரசித்திவிநாயகர் ஆலயத்தின்மீது கொண்ட பெரும்பக்தியால் பத்திற்கு மேலான பக்திப்பாடல்களை எழுதி கனடாவாழ் சிறுபிள்ளைகளின் குரல்வடிவில் “ ஞானஅமுதம்” என்னும் ஒலிப்பேழையை வெளியிட்டார்.
பாடல் ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயத்தில் வெளியிடும் வைபவத்தில் கூடிய சங்கீதபூஷணம் இசையமைப்பாளர்கள் ஆலயத்தின் பிரதமகுரு ஆகியோர் இணைந்து „அருட்கவி „என்னும் அழகான பட்டத்தினை வழங்கி மகிழ்ந்தனர்.
பின்னர் யாப்பு இலக்கணத்தை முறையேபயின்ற அருட்கவி “ஞானப்பழரசம் என்னும் சைவசமயத்தைச் சார்ந்த பக்திப் பாடல் மலர் ஒன்றினையும் “அருட்கவிஅமுதம்” என்னும் கவிதைமலரையும் வெளியிட்டுள்ளார். பற்பல மேடை நிகழ்ச்சிகள், வானலை, வானொளி நிகழ்ச்சிகளிலும் சூம்வழியாகவும் கவிதை படைத்து வருகின்றார். வாழ்த்து மடல்கள் எழுதுவதில் கைவந்த கவிஞரிவர்
இப்படிப்பட்ட பன்முகக் கலைஞர் கவிச்சோலை இன்பத் தமிழும் நாமும் எனும் நிகழ்வில் இணைந்துகொண்டுட ஒளிப்பதிவு 26.06.2021 இன்று இடம் பெற்றுள்ளது இதற்காண நெறியாழ்கை கவிஞர் கணேஸ் பிரன்ஸ்

ஆர்வம் உள்ளவர்கள் இணைந்து கொள்ள

மின்னஞ்சல் stsstudio@hptmil.de
முகநுால் https://www.facebook.com/STSTamiltv
STSதமிழ் +49178 3591369
முல்லை மோகன் +49 1577 3517849
கணேஸ் +33 6 51 27 81 22

கவிச்சோலை நிகழ்வுக்கான நேர்காணல் கவிஞர் கணேஸ் பிரன்ஸ்
ஒருங்கிணைப்பு ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன்
துணை ஒருங்கிணைப்பு ஊடகவித்கர் இக.கிருஷ்ணமூர்த்தி
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
தொழில் நுட்ப உதவி சிறிதர் லண்டன்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் அரங்க ஒழுங்கமைப்பு தேனுகா தேவராசா
படத்தொகுப்பு தொழில் நுட்பம் அரங்க ஒழுங்கமைப்பு தேவதி தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி