Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 தாயகத்தில் ஈகுருவியின் புதிய வெளிச்சம் – stsstudio.com

தாயகத்தில் ஈகுருவியின் புதிய வெளிச்சம்

கனடாவைத் தளமாகக் கொண்ட இகுருவி ஊடகத்தாரின் ஏற்பாட்டில் புதிய வெளிச்சம் என்ற தலைப்பில் அமைந்த வழிகாட்டல் கருத்தரங்கு இன்று 02.01.2018 தொடக்கம் முன்னெடுக்கப்படுகின்றது.
.
கல்விசார் கருத்தரங்கு ஆசிரியர்களுக்கு எனத் தனியாகவும் மாணவர்களுக்கெனத் தனியாகவும் நடைபெறுகிறது. இதைவிட விவசாயிகளுக்காகத் தனியான கருத்தரங்கு இடம்பெறவுள்ளது.
.
இதன் முதற்கட்டமாக ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு யாழ். மரியன்னை வித்தியாலயம், கிளிநொச்சி பிரதேச செயலகம் அருகில் உள்ள தொழினுட்ப கற்கை மண்டபம், முல்லை வலயக் கல்விப் பணிமனை என்பவற்றில் இன்று தொடக்கம் ஆரம்பமாகி மூன்று நாட்களுக்கு நடைபெறுகின்றது.
.
இந்த நிகழ்வுகளின் ஆற்றுப்படுத்துநராக தமிழகத்தின் பிரபல உளஆற்றுப்படுத்துதல் பேச்சாளர் பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் விளங்குகின்றார். இவருடன் தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியர்கள் ஐவர் வருகை தந்துள்ளனர். அத்துடன் புலம் பெயர் தேசம் சார்ந்தும் (கனடா, சுவீடன்) கல்வியாளர்கள் வருகை தந்துள்ளனர்.
.
வருகை தந்த கல்வியாளர்களுக்கும் உள்ளுர் ஆர்வலர்களுக்கும் இடையிலான சந்திப்பு 01.01.2018 புன்னாலைக்கட்டுவனில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது. அதன் புகைப்படம் இணைப்பில் உள்ளது.
.
விவசாயிகளுக்கான கருத்தரங்கை மேற்கொள்ள தமிழகத்தின் பிரபல இயற்கை விவசாய நிபுணர் பாமையன் வருகைதரவுள்ளார்.
.
நிகழ்வின் ஒருங்கிணைப்பை இகுருவியின் இயக்குநர் வல்வை அனந்தராஜ் நவஜீவன் மேற்கொண்டுள்ளார்.
……………………………………………………………………………
ஜனவரி 02 இலிருந்து 14 ம் திகதி வரை நடைபெறவுள்ள கருத்தரங்குகள் பற்றிய விபரம்.
.
கல்வி

1. ஆசிரியர்களுக்கான கற்பித்தல் வழிகாட்டல் பயிற்சிப் பட்டறை.

A. யாழ்ப்பாண மாவட்டம் – 2ஆம் திகதி முதல் 4ஆம் திகதிவரை, மூன்று நாட்கள்.
B. கிளிநொச்சி மாவட்டம் – 2ஆம் திகதி முதல் 4ஆம் திகதிவரை, மூன்று நாட்கள்.
C. முல்லைத்தீவு மாவட்டம் – 2ஆம் திகதி முதல் 4ஆம் திகதிவரை, மூன்று நாட்கள்.

2) அதிபர்களுக்கான நிகழ்வு
1) யாழ் வடமராட்சி வலயம் 2 ம் திகதி
2) கிளிநொச்சி மாவடட அதிபர்களுக்கானது 4 ம் திகதி

2. பாடசாலைக் கல்வியை பூர்த்திசெய்த இளைஞர் யுவதிகளுக்கான வழிகாட்டல் பயிற்சிப் பட்டறை.
A. யாழ்ப்பாண மாவட்டம் – 8ஆம் திகதி முதல் 12ஆம் திகதிவரை, ஐந்து நாட்கள். B. கிளிநொச்சி மாவட்டம் – 8ஆம் திகதி முதல் 12ஆம் திகதிவரை, ஐந்து நாட்கள். C. முல்லைத்தீவு மாவட்டம் – 8ஆம் திகதி முதல் 12ஆம் திகதிவரை, ஐந்து நாட்கள்.

விவசாயம்

3. விவசாயிகளுக்கான இயற்கைவிவசாய வழிகாட்டல் பயிற்சிப் பட்டறை.

A. யாழ்ப்பாண மாவட்டம் – 4ஆம் திகதி, ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.
B . மட்ட்க்களப்பு & அம்பாறை – 6, 7 ஆம் திகதி ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.
C. முல்லைத்தீவு மாவட்டம் – 8ஆம் திகதி, ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.
D. கிளிநொச்சி மாவட்டம் – 9ஆம் திகதி, ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.
E. மன்னார் மாவட்டம் – 10 ஆம் திகதி ஒரு நாள் பயிற்சிப்பட்டறை (
Thadsanamaruthamadu Maha Vidiyalayam)
F. முல்லைத்தீவு மாவட்டம் -11 ஆம் திகதி, ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.(Mallavi sivan Temple)
G . வவுனியா மாவட்டம் – 11ஆம் திகதி, ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.
4 யாழ்ப்பாணம் – 13ஆம் திகதி – அழைக்கப்பட்ட விருந்தினர்கள் மட்டும் – முழுநாள்

5) யாழ்ப்பணம் பொதுமக்கள் வீரசிங்கம் மண்டபம்

6) முடிவு விழா – பொங்கல் விழா – கிளிநொச்சி