பெண்மையைத் தொலைத்து!கவிதை ஜெசுதா யோ

இச்சை தீர்க்க
இணைப்பு வேண்டி
தடுப்பில்லாது
துடிப்பால் பெற்ற பிள்ளையை
வீதியிலும் குப்பையிலும்
உயிரோடு புதைத்தும்
பற்றைக்குள் எறிந்தும்
தாங்கள் புனிதமென்றே
பறைசாற்றி இன்னும்
இந்தப் பூமியில் இறப்பில்லாது
வாழும் மிருகங்களாய்…

ஆணின் இச்சைதீர்க்க
அடிமையாகி நீயும்
பெண்மையைத் தொலைத்து
ஆண்மையின் அடிமையில்
பச்சா தாபம் கொண்டே
கற்பை விலைபேசி
கருவினில் உதித்ததொன்றை
காக்கை கடிக்க வீதியில் எறிந்தாய்

புனிதம் என்று
புகழ் பாடும்
தாயின் கருப்பையைக் கூட
கழிவு தொட்டியாக்கிப் போகும்
பெண்களே..

நீ இன்னுமா இந்தப் பூமியில் வாழ்கிறாய் ?
புனிதம் இழந்து
பெண்மையைத்தொலைத்து
இன்னும் என்ன எதிர்பார்க்கிறாய்???

உங்களால் தானே
வீதியெங்கும் அனாதைகள்
கோவில்கள் எங்கும்
பிச்சைக்காரர்கள்
ஏனிந்த அவலம் செய்கிறாய்..??

நாளை நீயும்
நாய் தின்னாப் பிணமாய்
வாழாது…!!

புனிதம் கெடாது
வாழ்ந்து போ
வாழ்த்துவர்
ஏழையென்றாலும்
இப்புவியிலே..உன்னை

ஆக்கம் ஜெசுதா யோ