இராமர்கள்..!கவிதை கவிஞர்தயாநிதி

அழகு
அறிவு
அன்பு
பண்பு
காலாவதி.

இன்றைய
இராமர்களின்
குறி பணம்.
இல்லாதது
இலட்சியம்.

இன்றைய
இராமர்களின்
மனப் பையில்
இரக்கமில்லை
இரைப்பை
தானுண்டு..
பாசாங்குண்டு
பலம் இல்லை.

இன்றைய
இராமர்கள்
சொல்
வித்தைகள்
மட்டுமே
கற்றவர்கள்.
கல் வீடும்
கல்லா நிறைந்த
காசும் வேண்டியவர்.

இன்றைய
இராமர்களால்
உன் மனதில்
தொங்கும்
வரதட்சணை வில்லை
உடைக்க முடிவதில்லை.

ஆக்கம் கவிஞர்தயாநிதி