உதறி எறியாதே மகளே

உடன் பிறப்பதால் மட்டுமே,
உறவுகள் பிறப்பதில்லை மகளே !!
உன் வாழ்வு கண்டு மகிழும்,
உன்னதமான மனங்கொண்ட, எவரும்
உந்தன் உடன் பிறப்புகள் தானடி ,
உன் மேல் பாசம் காட்டவென ,
உலகிலே பல நடப்புகள் வரலாம் ,
உணர்வு மயமான தூய அன்பையும்,
உயர்ந்த பண்பு கொண்ட நட்பையும்,
உதவாக்கரை சினேகிதங்களையும், நீ
உணர்ந்து பிரித்து அறிந்து கொள்-மானே.
உருப்படாத நட்புக்காய் ,உன் நலன்விரும்பும்
உள்ளங்களை காயப்படுத்தி வீணே
உதறி எறிந்திடாதே, என் மனமே .
உயிர் கொடுக்கும் தோழமையும் உண்டு
உயிர்வாங்கும் தொல்லைகளும் உண்டு
உடன் சேரும் நட்புகள் எல்லாமே.
உன் உடன்பிறப்புகள் ஆகிடாது மகளே .
பாச நேசன்