கண்ணீரோடு மட்டுமே-ஜெசதா_யோ

உடல் வலுவிழக்கும் போது
உள்ளமும் வலுவிழந்து போகுது..
கனமாக இதயம்
ரணமாக கடக்கிறது..
உண்மை அன்பு மட்டுமே
வேண்டும் என்று
இதயம் இறைஞ்சுகிறது..
சிந்தனைகள் எல்லாம்
சிதறியபடி
கற்பனைகள் எல்லாம்
கண்ணீரோடு மட்டுமே …
இயலாமை மட்டுமே என்னை ஆட்கொள்ள
எதுவும் இல்லாத
சூனியப்பிரதேசத்தில்…
என்னைச் சுற்றிலும்
காற்றின்றி…இருள் கவிந்த
மந்தார நிலையில் ..
என்னை மறந்து வாழ்கிறேன்
இதயம் பலவீனமானதாலோ ??
ஜெசதா_யோ