தாவணிக் கால கனவுகள்


என்னழகு வண்ணமிட,
முன்னழகை மூடி விட,
என்னுடலில் ஏறிய முதல் தாவணியழகே..
பிறை நெற்றிப் பொட்டழகில்..
பின்னலிட்ட கூந்தலிலே
மல்லிகைப் பூச்சொருகிக்
நாணம் கொண்டு நான் நடக்கையிலே..
என் மேனி மூடிய தாவணியழகே..
மூக்குத்தி முத்தழகில்..
முகம் பூசி மணக்கும் சந்தனத்தில்
முத்துத் துளி வேர்வையினை
ஒத்தடமிடும் என் தாவணியழகே..
சுட்டியாய் சுற்றிய என்னில்
சுதந்திரத் தடைவித்து
சுந்தரக் கனவுகள் தந்த
தாவணிக் காலக் கனவுகளே..
என் வாழ்வினில் வசந்தக் காலங்களே..

கவித்தென்றல் ஏரூர்