கண் பேசுதடி கண்மணியே..

காதலில் கல்லாத மொழியைக்
கைதாகிக் கற்றேன் உன் கண்ணோரம்

கண்ணான கண்மணி ..
உன் கண் பேசும் வார்த்தைகள் சிங்காரம்

வில்லான உன் விழி வேலாகி..
நுழைந்தது என் நெஞ்சோரம்

விண் வேவி கலந்திட்ட ..
உன் பார்வை மின்சாரம்

ஒரு விடையின்றித் தவிக்கிறேன் உன் பார்வை தொடரணும் எந்நாளும்

பெண்ணை போற்றினால் எம் மொழியிலும் புகழாரம் ..

பெண்மையின் அன்புக்கு இவ்வுலகே ஆதாரம்..

உண்மையென்பேன் கண்கள் பேசும் மொழி கவிச்சாரம்

உலகில் பெண்கள் கண்ணை விட ஏதுமில்லை அவதாரம்

கவித்தென்றல் ஏரூர்