நான்கண்டகனவிலும்…. நீயே….!


என்னைச் சுற்றி சுவர்கள்
இருள் சூழ்ந்த நிலை
வெறித்தபார்வையோடு நான்
எதையும் சிந்திக்க முடியா மனநிலை
உதவுவார் யாரும் இல்லை
உன்னைத் துணைக் அழைக்கிறேன்
நீயோ என்னிடம் வர மறுக்கிறாய்
கோர பயத்தில்
நா வறண்டது ..
பேச்சுண்றி உதடுகள் உலர்ந்து
ஒட்டிக் கொண்டது…
யாரைத் துணைக்கு அழைக்க..??

ஏதோ என்னைச் சுற்றி நடக்கிறது என்பது மட்டுமே நான் அறிவேன்.
கால் கைகள் பதறுகிறது
மரணத்தின் வாயிலில் நான்..!!
மாண்டிடப் பயம் இல்லை ..!
இறுதிவரை உன்னை
பார்க்காமலே போகிறேன்
என்ற ஏக்கம் என்னுள்
வியாபித்திருந்தன….*

*அத்தனை அன்பெல்லா ஒருபொழுது
எனக்கு நீ தந்தாய்*

இன்று நீ விலகிநின்றாலும்..
மரணத்திலு மறக்க முடியா
பற்றெல்லவா….*

வா….வந்து என்னை பார்த்துவிடு என
முடியாமல் முனகுகிறேன்
நீ வரவே இல்லை
கண்கள் நீரைச் சொரிகிறது….
முடியாது மூச்சடைகிறது
காற்றுக் கூட இல்லை
உன்னிடம் வர எத்தனிக்கிறேன்
சாளரத்தை நொக்கி
தளர் நடையோடு எட்டினேன்…..!!!

கட்டிலில் இருந்து என் கால்கள்
தரையைத் தொட்டன…
ஜில்லென்றது பாதம்
பதட்டத்தோடு கண் விழித்தேன்
கண்டது கனவென்பதை
உணர்ந்து கொண்டேன்…!

சுற்றிலும் உனைத் தேடினேன்
என்னருகில் நீ இல்லை இதயத்தினுல்லவா இருக்கிறாய்..!

அருகில் உள்ள உன் புகைப்படத்தை
கட்டி அணைத்தபடி
மீண்டும் தூங்கினேன்
உன் நினைவுகளோடே….

ஜெசுதா யோ