ஆயிரம் கனவை மனதினில் விதைத்து
ஆசையின் சோலையாய் கனவினில் மிதந்து
அன்போடு பண்புற்று வாழ்ந்த உறவுகள்
அணையுடைத்த வெள்ளத்தால்
அழிவினில் அங்கே
ஆழியில் சாவு ,ஆயுதபோராட்டச்சாவு,
அரசுகளின் இன அழிப்பால்சாவு
ஆண்சாவு பெண்சாவு அக்கினி வெப்பத்தால்சாவு.என
அள்ளிவந்து கொள்ளிபோடுது இயற்கை ஈழத்தமிழினத்தைதேடி
சிறுக சிறுக கட்டிய வீட்டைவிட்டு
சிந்திடும் கண்ணீர் வெள்ள நீரோடு
வேதனையில் விழும்பில்
விம்மி அழும் தமிழ் இனமே
விடிவொன்று வாராதா…?
வேதனைகள் தீராத…?
நலிவுண்ட எம்மினத்துக்கு
நல்ல வழி பிறக்காத
ஓழிவுண்டவாழ்வுக்கு
ஒளியது தோன்றாதா..?
ஒற்றுமைகரம் உயர்த்தி
நற்செய்தி கூறாதா..?
நம் இனம் தலை நிமிர
உலகம் வாழ்தமிழ் இனம்
அவர்கள் வாழ்க்கை உயர
வழி ஒன்று செய்யாதா…?
ஆக்கம் இசைக்கவிஞன் எஸ். தேவராசா